ஞாயிறு, ஆகஸ்ட் 9
♥ குண்டு விழுந்த பூமியிலிருந்து...! ♥
அம்மா
செத்துப் போனது
தெரியாமல் பால் குடிக்கிறது,
குழந்தை...
தூக்க நினைக்கிற
எனக்கு...
இரண்டு கைகளிலும்
பாதி இல்லை.
_ஆதிசிவம்,சென்னை.
Labels:
கவிதை
டாக்டர் படம் கொடுத்தவன நடுரோடில ஓட..ஓட... விட்டு...!
துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்றார்.
புதிதாக சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களில் வாகனங்கள் ஓட்ட. நீங்கள் சர்க்கஸ் வித்தைக்காரர்களாக இருக்க வேண்டும்..!. சென்னையில் கால் மணிநேரம் மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு சாலையில் நீர் ஓடும்...!
பைக் ஆசாமிகள் இந்த தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி சாக்கடை நீர் போல் பொங்கி வரும்,எருமைப் பாய்ச்சல் தான், போங்க! திருவாளர் பொது சனம் மழையில் நடக்கவென்று ஒரு நடையே வைத்திருக்கிறார். கிழிந்த குடையை கையில் பிடித்து, பார்த்துத் பார்த்து கால் வைக்கும் அழகே அழகு தான்! இந்த இலட்சணத்தில் சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு நம்ம ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்திருக்கிறது. இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கிற ஆள தர தரன்னு இழுத்து வந்து நடுரோட்டில் ஓட ஓட விட்டு.... வேற ஓன்னும், தப்பான ஆசை எல்லாம் கெடையாதுங்க...!
முகத்தில சேற வாரி அடிக்க (ஆசை)ணும்...!
_ஆதிசிவம். சென்னை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே...!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....
அதிகம் பார்வையிட்ட பதிவுகள்
நான் இங்க இருக்கேன்....!
பின்பற்றுபவர்கள்
என்னைப் பற்றி
- ♥ மனிதன்@சென்னை ♥
- e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது"
-சார்லி சாப்ளின்
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!