புதன், நவம்பர் 19
"ஞாபக மரம்"- கவிதை
"ஞாபக மரம்"- கவிதை
காயத் தழும்புகளோடு
இயேசு
உயிரோடு வந்தார்...!
ஆச்சரியக் குறியாய்
மக்கள் கூட்டம்!
உங்களில் யோக்கியமானவர்கள்
இந்த தேவாலயத்திற்குள் நுழையலாம்
என்றார்
மறுநாளே
அந்த கிறிஸ்தவக் கோவில்
நிரந்தரமாக மூடப்பட்டது....!
அனாதைப் பிணம்
"ஈ" மொய்க்கும்
மனிதநேயம்!
என் மனப் பறவை
வாழ்க்கை வானத்தில்
மனசு வலிக்க
தேடி பறந்து கொண்டேதான்
இருக்கிறது....!
நீயும் நானும்
அமர்ந்து பேசிய
ஞாபக மரம்
வெட்டப் பட்டது
தெரியாமல்.....
_ஆதிசிவம்,சென்னை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வணக்கம்!
என் இனிய இணைய இளைய தமிழகமே...!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....
அதிகம் பார்வையிட்ட பதிவுகள்
நான் இங்க இருக்கேன்....!
பின்பற்றுபவர்கள்
என்னைப் பற்றி
- ♥ மனிதன்@சென்னை ♥
- e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது"
-சார்லி சாப்ளின்
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!