சனி, ஜனவரி 3

மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !

மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி !






விஜயகாந்த்,ரஜினிகாந்த் போன்ற புரட்சியாளர்கள் முதல்வர்களாக வர வேண்டும் கொடி பிடித்து அலையிற நாட்டில் போலி ஜனநாயகம்,போலி அரசியல்வாதிகளின் கை பிடிக்குள் இருக்கிற நாட்டில்,கம்யூனிச சிந்தனைவாதிகளும் போலி கம்யூனிஸ்ட்டுகளாக அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.



கர்நாடக கம்யூனிஸ்ட்,கேரள, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் அந்த அந்த மாநில உணர்வோடுதான் இருந்தால்தான் வோட்டு பொறுக்க முடியும் . எடுத்துக்காட்டாக ஒரு தமிழன்.தமிழன் என்ற உணர்வோடு இருந்தால் கேரளாவில் ஒரு சின்ன பெட்டிக்கடை கூட வைத்து பிழைக்க முடியாது. பிழைக்க போன இடத்தில் மலையாளிகளின் உணர்வோடு ஒத்துப் போனால் தான்,அந்த தமிழனால் உயிர் பிழைக்க முடியும் .

இந்த நிலைபாட்டை புரிந்து கொண்டால் தான் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் கேரளா கம்யூனிஷ நாடாக இருந்தாலும்,தண்ணீர் தர மறுக்கிறது.இந்த நடைமுறை உண்மையை உணர்ந்தால் தான் இந்த மண்ணுக்கேத்த புரட்சியை முன்னெடுத்து செல்ல முடியும்.





மொழி,சாதி ,மதம் ,நாடு போன்ற பிரிவினை செய்யாத ஒரு புதிய இந்தியாவை அமைப்பது வெறும் கம்யூனிஷ்டுகள் மட்டுமே செய்ய வேண்டும் என்று குறை கூறி திரிபுவாதம் பேசாமல் அனைவரும் பங்கேற்க,பங்கேற்கபடி செய்ய வேண்டும்.


அதை விட்டு விட்டு கம்யூனிஸ்டுகளை குறை கூறுவதால் மட்டும் மகஇக-வே நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் ஆகிவிட முடியாது.



இந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளின் நிழலின் தான் பொதுவுடைமை ,பெரியார் இயக்கங்கள் வளர வேண்டிய சூழலுக்கு தள்ள பட்டு கிடக்கின்றன.

அந்த கட்சியை சேர்ந்த தோழர்கள் தங்களின் சொந்த பணத்தை,நேரத்தை,உழைப்பை ஏன் சில சமயங்களில் இரத்தத்தைக் கூட கொடுத்து, தன் குடும்ப நலனை விட,நாட்டு நலனே முக்கியம் என்று பணம், பணம் என்று பணத்துக்கு பின்னால் ஓடும் சராசரி மனிதப் பிணங்களுக்கு மத்தியில் தியாக தீபங்களாக,உண்மையான மனிதர்களாக நடமாடி வருகிறார்கள்.





இவர்களுக்கு நீங்கள் மரியாதை கூட தர வேண்டாம்.அவமானப்
படுத்தாதீர்கள்! இவர்களின் தியாகங்களை கொச்சை படுத்தாதீர்கள்!


பெரியார் படைத் தளபதி கி.வீரமணி பெரியார் சிந்தனைகளை விற்று காசக்கிறார் என்று ஊளைவிடுகிறீர்கள்.பெரியார் சிந்தனைகளை விற்று காசாக்குவது கடினம்.மக்களை சிந்திக்கிற தூண்டுகிற உண்மைகள் அவைகள். அந்த கடினமான பணியை பெரியாரின் இறப்புக்கும் பிறகும் கூட செய்து பெரியார் இயக்கத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டிய பெருமை,கம்பீரம் தமிழர் தலைவர் கி.வீரமணிக்கு உண்டு.இந்த நல்ல விஷயத்தை முடிந்தால் பாராட்டக் கற்றுகொள்ளுங்கள்.


உங்கள் அணுகுமுறையில்,பேச்சில்,உங்கள் எழுத்தில் அழுகல் வாடை அல்லவா வீசுகிறது?கடவுளை கட்டி அழுகிற முட்டாள் மூடநம்பிக்கைவாதிகளை, முதலாளிகளை காப்பாற்றுகிற பணமுதலைகளின் அசல் குரலாகத்தான் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது.


ஏ.....! ஓநாய் கூட்டமே!உன் குரலை நீயே உற்றுக் கேள்.அந்த உண்மை உனக்கே புரியும்.!

பொய் முகத்தோடு,பொய் இமெயில் முகவரியோடு,எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு அழுகிப் போன எழுத்துக்களை அள்ளி வீசும் கோழைகளே !நீங்களோ உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்? நீங்களா புரட்சியின் புதல்வர்கள்? அட! மானம் கெட்டவர்களே!



அரசு டாஸ்மாக் சாராயம் விற்ற காசில் ரேஷன் கடையில் சர்க்கரை பொங்கல்,ஒரு ரூபாய் அரிசி என்று இலவசமாக வழங்கும் போலி அரசியல்வாதிகளை தான் நீங்கள் அதிகமாக விமர்சிக்க வேண்டும்? அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள்?



மிஞ்சிப்போனால் தமிழ் நாட்டுக்குள் வெறும் பத்து இடங்களுக்கும் குறைவாக தேர்தலில் வெற்றி பெறும் (உங்கள் பாணியில் சொன்னால்) போலி கம்யூனிஸ்டுகளின் மீத உங்கள் எழுத்து அசிங்களை அள்ளி வீசுவது? அதிமுக,திமுக,தேமுக,மதிமுக போன்ற நாடு "முன்னேற" உழைக்கும் உண்மையான அரசியல்வாதிகளை,உண்மையான கம்யூனிஸ்ட்டுகளான நீங்கள் விமர்ச்சனம் செய்யுங்கள்! அந்த விமர்சனத்தை பார்த்து புல்லரித்துப் போகும் மக்கள் உங்களுக்கே ஒட்டு போட்டு புளகாங்கிதம் அடைவார்கள்!





எங்களுக்கு யாரும் ஓட்டெல்லாம் போட மாட்டர்கள் என்ற அவநம்பிக்கை உங்களுக்கு தோன்றினால்...

உங்கள் செயல்,நடவடிக்கைகள்,குழுக்களை கலைத்து விட்டு மக்களோடு மக்களாக வாழ முயற்சி செய்யுங்கள்!





பெரியார்,பொதுவுடைமை இயக்கங்களை குறை சொல்லுவது மட்டும்ந்தான் உங்கள் புரச்ச்ச்ச்ச்.....சி அரசியல் என்றால் தயவு செய்து எல்லோரும் நல்ல மன நோய் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!




அதுதான் உங்களுக்கும்,மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லது!

(என் இணைய தளத்தில், நான் எழுதிய "மகஇக-வே இதோ உனக்கு ஒரு சாவு மணி!" என்ற அரசியல் கட்டுரையை , தன் வலைத் தளத்திலும் பதிவு செய்து கொண்ட

http://soccpiml.blogspot.com/2009/01/blog-post_05.html

என்ற வலைதளத்திற்கு நன்றி! )


உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு