வெள்ளி, ஜூலை 25

தினத்தந்தி முதலிடம் வந்த கதை-பாகம் 1







பாகம் 1

தினத்தந்தி முதலிடம் வந்த கதை

அக்காலத்தில் சென்னைக்கு வெளியே எந்த நாளிதழும் வெளி வர வில்லை.

மதுரையில் 1942 நவம்பர் 1 ஆம் தேதி அன்று முதல் தான் (தினத்)தந்தி நாளிதழ் வெளி வரத் தொடங்கியது.சென்னையில் அச்சடிக்கும் பத்திரிக்கைகள் மதுரைக்கு மறுநாள் தான் வரும்.அதற்குள் செய்திகள் பழசாகிவிடும்.

எனவே, மதுரையிலிருந்து 150 மைலுக்குள் இருப்பவர்களுக்கு அன்றே செய்திகளை வழங்கியது ,தந்தி. செய்திகளின் தலைப்பில் நட்சத்திரக் குறியிட்டு இந்த செய்தி மற்ற பத்திரிக்கைகளில் நாளைதான் வெளி வரும் என்ற குறிப்போடு அசத்தலாக வெளிவரும்.

உலகிலேயே விற்பனை அதிகமுள்ள "டெய்லி மிரர்" என்ற லண்டன் செய்தித் தாள் முறையை பின்பற்றி தான் வெளிவந்தது,தந்தி.

அந்த காலத்தில் நாளிதழ் அலுவலகத்திற்கு உள்,வெளிநாட்டுச் செய்திகள் ஆகியவை எல்லாம் தந்தி மூலமாக தான் வரும்.அதை அடிப்படையாக வைத்தே அந்த பெயர் சூட்டப்பட்டது.

1942 இல் தினத்தந்தியின் நிறுவனர் அய்யா ஆதித்தனார் நடத்திய "மதுரை முரசு" , என்ற செய்தித் தாள் வெறும் இரண்டு மாதம் மட்டுமே வெளி வந்து, நின்று போனது.

காரணம்?

"வெள்ளையனே வெளியேறு" , என்ற போராட்டம் நடந்தபோது மதுரையில் போலீஸ் படை துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை சுட்டுக் கொன்றது."ஒருவர் மட்டுத்தான் கொல்லப் பட்டார்" , என்று செய்தி வெளியிடும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். "மூன்று பேர் கொல்லப் பட்டார்கள்!" என்ற செய்தியை வெளியிட்டுவிட்டு அத்துடன் அந்த இதழ் தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது.

தந்தி தொடங்கிய பொழுது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் ,பத்திரிக்கைக்கான காகிதம் கிடைக்க வில்லை.தந்தி அலுவலகத்துக்கு நாள்தோறும் காலையில் வைக்கோல் வண்டி வரும்.மறுநாள் காலையில் அந்த வைக்கோல் தந்தி பத்திரிக்கையாக மாறி வெளியே போகும்.ஆரம்ப நாட்களில் தந்தி அலுவலகத்திலேயே காகிதமும் தயாரிக்கப்பட்டது.

சென்னையில் தந்தி தொடங்கப் பட்ட நேரத்தில் "பர்மாஷெல்" , என்ற பெட்ரோல் கம்பெனியின் சில்லறை விற்பனை நிலையங்கள் சென்னையில் இருந்தன.அதன் விளம்பரத்தை தந்தி படிப்பவர்கள் யாரும் கார் வைத்திருக்க மாட்டார்கள் என்று காரணம் சொல்லி தந்திக்கு விளம்பரம் தர,அந்த கம்பெனி மறுத்தது."ஒவ்வொரு டாக்சி டிரைவரும் டாக்சியின் சன்ஸேடில் தந்தியை செருகி நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
வைத்திருப்பதைக் காணமுடியும்" , என்று அந்த கம்பெனி நிர்வாகி ஒருவரே எடுத்துச் சொன்னார்.

இப்படித்தான் முதல் வெளிநாட்டு விளம்பரம் தந்திக்கு கிடைத்தது!


1943 செப்டம்பரில் சென்னையில் முதல் பதிப்பை தொடங்கிய நேரம், ஒரு நாள் சரியான அடைமழை!புயலும் சேர்ந்து கொண்டது.நாள் முழுவதும் மின்சாரமும் அடியோடு நின்று விட்டது.

பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்து செய்திகளை எழுதி,அச்சுக் கோர்த்தார்கள்.மின்சாரம் இல்லாமல் எந்திரத்தை எப்படி இயக்குவது?மனித சக்தியை நம்பினார்,ஆதித்தனார்.கையாலேயே எந்திரத்தைச் சுற்றி,பத்திரிக்கையை அச்சிட்டார்.

மறுநாள் காலையில் வெளிவந்த ஒரே நாளிதழ் "தந்தி" தான்!

1948 இல் ஆதித்தனாரின் அண்ணன் சி.தை.ஆதித்தன் மதுரையில் இறங்கி,ஒரு குதிரை வண்டியில் ஏறி,"தந்தி ஆபிசுக்குப் போ" , என்றார்.

வண்டியும் சரியாக தபால் தந்தி அலுவலகம் முன்னால் போய் நின்றது.

"இதில்லை.தந்தி என்று ஒரு செய்தித் தாள் வருகிறது அல்லவா? அந்த ஆபிசுக்குப் போ", என்றார்.

அங்கு போய் இந்த சம்பவத்தைச் சொன்னார்.அதன் பிறகு தான்
தந்தி நாளிதழின் பெயர் "தினத்தந்தி" , என்று ஆனது.

"உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" , என்ற முதல் முழக்கத்தை முழங்கியவர்.அந்த முழக்கத்துக்கு தன் பத்திரிக்கை வழியே உயிர் கொடுத்தவர்,நம் அய்யாஆதித்தனார் அவர்கள் தான்.

"பத்திரிக்கையில் தலையங்கம் இல்லா விட்டாலும்,செய்திகளை நான் கொடுக்கிறேன்.நீ படித்துக் கொள்,நீ சிந்தித்து ஒரு முடிவுக்கு வா என்கிற துணிச்சலை சொல்லித் தரும்,நடுநிலை நாளேடு தினத்தந்தி என்று ஒரு முறை சொன்னார்", அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.

ஆதித்தனார் படைப்பான நாள்தாள், "எழுத்தாளர் கையேடு",தமிழ்நாட்டின் எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும்,இன்றும் கூட சிறந்த வழிகாட்டியாக சிறந்து விளங்கி வருகிறது!

"சனியன்று காலை ஒரு தலைவர் இறந்து போகிறார்" , என்று வைத்துக் கொள்ளுங்கள்.மாலைத் தாள்கள் எல்லாம் செய்தியை வெளியிட்டு விடும்.நம்முடையதோ மறுநாள் காலையில் வெளியாவது."ஞாயிறு காலையில் தலைவர் இறந்தார்" , என்று போடலாமா?கூடாது.பின் எப்படி?இன்று தலைவர் உடல் அடக்கம் என்று தலைப்புத்தர வேண்டும்", என்றெல்லாம் பாடம் நடத்தியவர்,ஆதித்தனார்.

மற்ற பத்திரிக்கைகள் "தபால் கார்டு விலை உயர்கிறது" , என்று செய்தி வெளியிட்டால்,"தந்தியோ இன்று முதல் தபால் கார்டின் விலை உயர்கிறது" ,என்ற தலைப்போடு வெளிவரும்.

மற்ற பத்திரிக்கைகள் பட்டினிச்சாவு செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தபோது தந்தி மட்டும் பெரிதாக வெளியிட்டு பிரசுரம் செய்யும்.

பெரியார்,அண்ணா,கம்யூனிஸ்ட் தலைவர்களின் பிரச்சாரங்களை பற்றிய செய்திகளை வெளியிட்ட ஒரே நாளேடு நம் தினத்தந்தி தான்!

ரிக்.ஷாக்காரர்கள்,வாட்ச் மேன் போன்ற அடித்தட்டு மக்களும் படிக்கும்படியான எளிய தமிழில் வெளிவந்ததால், உயர் வகுப்பினர் யாரும் படிக்க மாட்டார்கள்.நாளடைவில்(கவுரவம் போய் விடும் என்பதால் ) ஆங்கில நாளேடான இந்து பத்திரிக்கைக்கு இடையில் மறைத்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் பட்டார்கள். அந்த வளர்ச்சிக்கு பெயர் தானே, "தினத் தந்தி " !

காலை நாளிதழ் என்பதால் பெரும் பாலும் இரவு நேரத்தில் தான் அச்சாகும். "மெஷின் நின்றால் வீட்டிலிருக்கும் தனக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்" , என்பார்.

பழுதான பாகத்தை ஒர்க் ஷாப்புக்கு தூக்கிப் போவது,மின்சார கோளாறு போன்ற பிரச்னைகளை சரி செய்த பிறகே, வீட்டுக்கு தூங்கப் போவார்.

1950 ஆம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று வெளித் தொழிற்சங்க தலையீட்டின் காரணமாக தினத்தந்தி அலுவலகத்து தொழிளாலர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்.

ஒரு நாள் கூட தினத்தந்தி நிற்கக் கூடாது என்பது தானே ஆதித்தனாரின் கொள்கை ?

30 பேர் மாலை அய்ந்து மணி அளவில் அலுவலகத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.

ஆதித்தனார் ஒரே ஒரு துணையாசிரியரோடு 4 பக்கங்களுக்கு தேவையான செய்திகளை தானே எழுதிக் குவித்தார்.வெளியில் சென்றவர்களில் 13 பேர் அன்றே மன்னிப்புக் கோரி மீண்டும் வேலைக்கு வந்து விட்டார்கள்.

பிறகென்ன,தினத்தந்தி வழக்கம் போல வெளிவந்தது!

1948 இல் ஒரு நாள்...

அன்று 7 ஆம் தேதி சம்பள நாள்.சம்பளம் கொடுக்கப் பணம் இல்லை.சேட்டிடம் கடன் வாங்கப் போனவன், " ஏகப்பட்ட கடன் இதற்கு மேல் கடன் தரமுடியாது" , என்று சேட் கண்டிப்பாகச் சொல்லி விட்டார் என்று, வெறுங்கையுடன் திரும்பி வந்தான்.

எந்தக் கஷ்டத்திலும்,"ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது தவறக் கூடாது.யாரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்.இருக்கச் சொல்லுங்கள்.நான் வந்து விடுகிறேன்!" என்று காரை எடுத்துக் கொண்டு ஆதித்தனார்,அய்யா கிளம்பினார்,சேட்டைப் பார்க்க...

_ஆதிசிவம்,சென்னை.






உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு